Pin It

Widgets

ஊடாட்டம்

Saturday, February 21, 2015 | 0 comments »

கொழுவு ஈட்டி கிழிக்கும்
பாம்பின் தசையில் உண்ட
மாமிசங்களின் அடையாளமில்லை

அரச இலைகள் சரசரக்கும்
மேக்காற்றில் எளிதாய்
இரவுகள் தீர்வதில்லை

ஈசல்களின் வருகைக்கு
மழையும் மழை நிற்பதும்
தேவையாய் இருக்கிறது

உள் ஒளித்து வெளிக்கொணரும்
சந்திப்பதற்கான சொற்களின்
தாய உருட்டதலாய்...

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets