Pin It

Widgets

கேவல்கள் நிறைந்த பொழுதை
வாய் திறவாமல் கழிப்பதென்பதன்
துயரம் தெரியுமா உனக்கு?

உலையேறும் அரிசி
இறந்தவனின் படயலுக்கா
இலைபோட்டு காத்திருப்பவனுக்கா

பரிமாறுபவரின் கைகள் கூட
தீர்மானிக்க அனுமதியில்லை
கடமைக்கென நிகழும் விளையாட்டில்

விருட்டென கடக்கும் வாகனத்தில்
விழுந்திறக்கும் கருவேந்திய நாயாய்
கனவுகள் உடைக்கிறாய் எதிர்பாரது

சிதைவுகளின் பிசுபிசுப்பு
கூடி நிற்பவர்களுக்கு அனுதாபம்
எப்போதும் கரைந்த உனக்கு உணவு

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets